ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர்கிராமத்தில் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் மற்றும் ஆற்றங்கரை பிள்ளையாருக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு,  அள்ளூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மக்கள்டுடே சேனலில் 
முழுமையாக பார்க்க
https://youtu.be/bJechacRtI4

இன்னும் புத்தம்
புதிய வீடியோக்கள் பார்க்க
சேனலை மறக்காமல் Subscribe பண்ணுங்க





கோவில் சிலைகளை மர்மநபர்கள் எடுத்துச்சென்றாக கிராம மக்கள் குற்ச்சாட்டு  

Posted by வி.ஆர்.ஷங்கர்


u




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் கிராமத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் கோவிந்த ராஜபெருமாள் கோவில்களில் உள்ள ஐம்பொன் மற்றும் செப்பு சிலைகளை கடந்த சனிக்கிழமையன்று காலை பதினோறு மணியளவில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மர்மநபர்கள் எடுத்து சென்றுவிட்டதாக கிராமக்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவந்து வைப்பதற்காக போராட்டம் நடத்தப்போவதாகவும் பரதூர் கிராமமக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது கிராமங்களில் பாதுகாப்பற்ற நிலைகளில் இருக்கும் கோவில்களின் சிலைகளை பாதுகாப்பாக வைக்குபொருட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பரதூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட சிலைகளும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.


முயற்சி முக்கியம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

Use my personal link http://apps.yatra.com/yatr31mgv-7y to install Yatra app and register to earn Rs 2000 eCash. Invite your friends using your personal link and earn Rs 1500 eCash per friend.

ஆச்சரிய பரிசு  

Posted by வி.ஆர்.ஷங்கர்

Use my personal link http://apps.yatra.com/yatr31mgv-7y to install Yatra app and register to earn Rs 2000 eCash. Invite your friends using your personal link and earn Rs 1500 eCash per friend.

அடிப்படை வசதியில்லை  

Posted by வி.ஆர்.ஷங்கர்

https://youtu.be/RikqIydqjmU

உயிர்ப்புள்ள கதை  

Posted by வி.ஆர்.ஷங்கர்

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:

மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:

மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''

மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்:

மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:

மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''

கடைசியாக மனைவி கேட்டாள்:

நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?

விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.

நீதி: உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவொடுக்கும் திறமையையும் இயல்பாகவே வெளிப்படும்.

குழப்பம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

*நடராஜன் அறுவை சிகிச்சையில் தொடரும் மர்மங்கள்..! குளோபல் மருத்துவமனை அறிக்கையும் அடுக்கடுக்காக எழும் கேள்விகளும்..!*

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் நடராஜன் நலமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
ஆனால், அவரது அறுவை சிகிச்சைக்காக உறுப்புகள் பெறப்பட்டது மட்டும் மர்மமாகவே உள்ளது. குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையும் அதன்மூலம் எழும் கேள்விகளும்...
*குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:*
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 30-ந் தேதி கார்த்திக் என்ற இளைஞர் தலைக் காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய பெற்றோருக்கு நோயாளியின் நிலை குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
ஆனால் அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கார்த்திக்கை அழைத்துச் செல்ல முடிவு செய்து எங்கள் மருத்துவமனைக்கு  அழைத்து வந்தனர்.
அவருக்கு தலைக்காயத்துடன், எலும்பு முறிவு உள்பட வேறு பல காயங்களும் ஏற்பட்டு இருந்தன. தொடர்ந்து அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அவர் அக்டோபர் 3-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரிடம் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.
அதன்படி அவர்களுடைய குடும்பத்தினரும், “கார்த்திக் இறந்துவிட்டாலும் அவருடைய உறுப்புகளை தானமாக பிறருக்கு வழங்குவதன் மூலம் அவர் உயிர்வாழ்வதாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே கார்த்திக்கின் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு சம்மதிக்கிறோம்” என்று சம்மதம் வழங்கினர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அரசு விதிகளின்படி கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஆகியவை குளோபல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.
அதில் 43 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ஆண் நோயாளிக்கு இதயம், 62 வயதான உத்தரப் பிரதேச ஆண் நோயாளிக்கு நுரையீரல், 74 வயதான ஆண் நோயாளிக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இவ்வாறு குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
( மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நடராஜனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 74 வயது ஆண் நோயாளி என மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தது.)
இதன் அடிப்படையில்தான், தஞ்சாவூரிலிருந்து கார்த்திக் சென்னை குளோபலுக்கு அழைத்து வரப்பட்டது தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் வலுக்கின்றன.
*இந்த அறிக்கை எழுப்பும் கேள்விகள்:*
1. ஏழை கூலித்தொழிலாளியான கார்த்திக்கின் குடும்பத்தினர், குளோபல் மருத்துவமனையில் வைத்து கார்த்திக்கிற்கு மேல்சிகிச்சை செய்யத் துணிந்தது எப்படி?
2. அதற்கான பண வசதி இல்லாதபோது கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு எப்படி அழைத்துச் சென்றனர்?
3. உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் கல்லீரலும் சிறுநீரகமும் எப்போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கும் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே குளோபல் மருத்துவமனைக்குச் சென்றது எப்படி?
4. அது எதேச்சையாக நடந்ததா? அல்லது கார்த்திக் திட்டமிட்டு குளோபல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா?
5. அப்படியென்றால் கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தது யார்?
6. அப்படி பரிந்துரை செய்தவர், எத்தனையோ மருத்துவமனைகள் இருந்தும் என்ன காரணத்திற்காக குளோபல் மருத்துவமனையை பரிந்துரை செய்தார்? குளோபல் மருத்துவமனையை பரிந்துரை செய்து அங்கு அழைத்து செல்வதால் அவருக்கு என்ன லாபம்?
7. கார்த்திக் உண்மையாகவே மூளைச்சாவு அடைந்தாரா? அல்லது மூளைச்சாவு அடைய வைக்கப்பட்டாரா?
என அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.